தேர்தல் விஞ்ஞாபன பகிர்வு குறித்து திருகோணமலை மாவட்ட சமூக தலைவர்களுடன் கலந்துரையாடல்
இலங்கையில் நடைபெற இருக்கும் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞாபனத்தைப் பொதுமக்களிடம் பகிர்வதை மையமாகக் கொண்டு திருகோணமலை மாவட்ட சமூகத் தலைவர்களுடன் கலந்துரையாடல் இன்று (13)கிண்ணியாவில் இடம் பெற்றது.
கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு இன்று காலை 9:00 மணிக்கு கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.
முக்கிய விடயங்கள்
உள்ளடக்கிய ஆட்சிக்கான குடிமக்களின் குரல் மற்றும் முன் முயற்சி எனும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட, 'பிரஜைகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பகிர்ந்து கொள்ளல்' செயல்முறை கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் புகாரி முகமத் தலைமையின் கீழ் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில், சமூக செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், சமயத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பெண்கள் அமைப்புகள், இளைஞர்கள், யுவதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |