ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் மைத்திரி தரப்பு சந்திப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் சிறிலங்கா சுத்திரக்கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலேயே முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு எதிர்வரும்21ம் திகதி இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகயினை தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனும் சுதந்திரக் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இந்த சந்திப்பிற்கான திகதி இன்னும் குறிக்கப்படவில்லை.
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்திலும், பிரதமருடனான பேச்சுவார்த்தை அலரிமாளிகைளிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதேவேளை, அரசாங்கத்தின் பங்காளியிலிருந்து விலகுமாறும், சுதந்திரக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், அண்மையில் நடந்த மத்தியக்குழுக் கூட்டத்தின் போது வலியுறுத்தியிருந்தனர்.
எனினும், நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு அவ்வாறான தீர்மானங்களை எடுக்காமல், அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருடன் பேச்சுவார்த்தை ஈடுபடுவதற்கே சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
அந்த வகையிலேயே இந்த சந்திப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
