ஜேர்மன் உயர்ஸ்தானிகருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு (VIDEO)
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகர் HOLGER SEUVERT ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்றைய தினம் திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது ஜேர்மன் உயர்ஸ்தானிகர் கூறுகையில்,
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் விவசாயத்துறை தொடர்பான அபிவிருத்திக்கு ஜேர்மன் அரசாங்கத்தினால் முடியுமான பூரண ஒத்துழைப்பை வழங்க உள்ளது.
சுமார் 250க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தயாராக இருக்கின்றனர்.
அதன் மூலம் பிராந்திய அபிவிருத்தி உட்பட ஏற்றுமதி வாய்ப்புகளும் ஐரோப்பிய சந்தைக்கு மேற்கொள்ள ஏதுவாக அமையும்.
ரம்மியமான பிரதேசமாக கிழக்கு மாகாணம் காணப்படுகிறது. முதலீட்டுக்கு ஏற்ற நிலவரம் இந்த மாகாணத்தில் காணப்படுவது முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.
முதலீட்டு வாய்ப்புகள் மூலம் இலங்கையினுடைய பொருளாதாரத்துக்கு வலு சேர்க்க முடிவதோடு ஏற்றுமதி அபிவிருத்தியும் ஏற்படக்கூடிய நிலவரம் ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜேர்மன் உயர்ஸ்தானிகருடன் ஜேர்மன் வர்த்தக சங்க தலைவரும் இதில் கலந்து கொண்டதுடன், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பீ வணிகசிங்க, ஆளுநர் செயலாளர் எல்.பீ.மதனாயக்க உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam