தேசிய மக்கள் சக்தியினருக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையில் சந்திப்பு
தேசிய மக்கள் சக்தியினருக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்குமான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று(16.02.2024)யாழ்பாணம் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அரசியல் நகர்வுகள்
தேசிய மக்கள் சக்தியின் வட மாகாண அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் யாழ் இணைப்பாளர் k.இளங்குமரன் ஆகியோரும் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பில் தலைவர் சி.வேந்தன் மற்றும் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது சமகால தேசிய பிராந்திய சர்வதேச அரசியல் நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
குறிப்பாக இலங்கையில் தமிழ் மக்கள் தற்போது அனுபவித்து வருகின்ற அத்துமீறிய நில ஆக்கிரமிப்பு, எல்லை தாண்டிய மீன்பிடி, தமிழர் நில கடல் வளங்கள் அந்தந்த பிரதேச மக்களின் எதிர்பினையும் தாண்டி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படுதல் போன்ற விடயங்களில் தேசிய மக்கள் சக்தியினர் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் குரல் கொடுக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் இலங்கையி்ல் புரையோடிப்போயிருக்கும் இன பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தியினர் முன்வைக்க போகும் தீர்வு திட்டம் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.





உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
