பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கையின் பிரதமருக்கிடையே சந்திப்பு
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் முகமது சாத் கட்டாக் இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
இதனை பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரம் அறிவித்துள்ளது.
இதன்போது, பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், கல்வி ஒத்துழைப்பு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பு குறித்துக் கலந்துரையாடல் நடைபெற்றது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான கலாச்சார பாரம்பரியம் மற்றும் மத சுற்றுலாவை மேம்படுத்துவதில் இதன்போது சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மத சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகப் பாகிஸ்தான் அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் குறித்து உயர்ஸ்தானிகர் இலங்கையின் பிரதமருக்கு விளக்கமளித்ததாக பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் அறிவிக்கப்பட்ட அல்லாமா இக்பால் உதவித்தொகையின் கீழ் இலங்கை
மாணவர்களுக்குக் கிடைக்கக்கூடிய உயர் கல்வி வாய்ப்புகள் குறித்தும் இலங்கையின்
பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகம்
தெரிவித்துள்ளது.