கிண்ணியா நகரசபையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆளுநருடனான சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவுக்கும் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (03) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடல்
இந்த சந்திப்பில் கிண்ணியா நகர சபையில் நிலவுகின்ற ஆளணி பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, வருமானத்தை ஈட்டுவதில் இருக்கின்ற இடையூறுகள் மீன் சந்தை கட்டிட நிர்மாணம், கழிவு முகாமைத்துவ நிலையம் எதிர் நோக்குகின்ற சவால்கள், இடத்தட்டுப்பாடு, யானை வேலி அமைத்தல், சுற்றுலா துறையை மேம்படுத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டது.
கிண்ணியா நகர சபை சார்பாக முன்வைக்கப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை தான் எடுப்பதாக ஆளுநரினால் இணக்கமும் தெரிவிக்கப்பட்டதாக நகர சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
