அமெரிக்க தூதுவருக்கும் கடற்படை தளபதிக்கும் இடையே முக்கிய சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படைத் தலைமையகத்தில் இன்று (20) சந்தித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக ஜூலி சுங் பதவியேற்ற பின்னர், அவர்களுக்கிடையிலான முதலாவது உத்தியோகபூர்வ கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது.
இச் சந்திப்பின் போது, அமெரிக்கத் தூதுவர் மற்றும் கடற்படைத் தளபதி இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த மூத்த பாதுகாப்பு உதவியாளர் லெப்டினன்ட் கேணல் டிராவிஸ் காக்ஸ் மற்றும் அமெரிக்க கடற்படை இணை லெப்டினன்ட் கமாண்டர் ரிச்சர்ட் லிஸ்டர் ஆகியோரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 34 நிமிடங்கள் முன்
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri