அமெரிக்க தூதுவருக்கும் கடற்படை தளபதிக்கும் இடையே முக்கிய சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படைத் தலைமையகத்தில் இன்று (20) சந்தித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக ஜூலி சுங் பதவியேற்ற பின்னர், அவர்களுக்கிடையிலான முதலாவது உத்தியோகபூர்வ கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது.
இச் சந்திப்பின் போது, அமெரிக்கத் தூதுவர் மற்றும் கடற்படைத் தளபதி இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த மூத்த பாதுகாப்பு உதவியாளர் லெப்டினன்ட் கேணல் டிராவிஸ் காக்ஸ் மற்றும் அமெரிக்க கடற்படை இணை லெப்டினன்ட் கமாண்டர் ரிச்சர்ட் லிஸ்டர் ஆகியோரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 23 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam