அமெரிக்க தூதுவருக்கும் கடற்படை தளபதிக்கும் இடையே முக்கிய சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படைத் தலைமையகத்தில் இன்று (20) சந்தித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக ஜூலி சுங் பதவியேற்ற பின்னர், அவர்களுக்கிடையிலான முதலாவது உத்தியோகபூர்வ கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது.
இச் சந்திப்பின் போது, அமெரிக்கத் தூதுவர் மற்றும் கடற்படைத் தளபதி இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த மூத்த பாதுகாப்பு உதவியாளர் லெப்டினன்ட் கேணல் டிராவிஸ் காக்ஸ் மற்றும் அமெரிக்க கடற்படை இணை லெப்டினன்ட் கமாண்டர் ரிச்சர்ட் லிஸ்டர் ஆகியோரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri