குருநாகல் பேராயர் ஹரல்ட் அந்தோனி பெரேராவை சந்தித்துள்ள ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் குருநாகல் பேராயர் ஹரல்ட் அந்தோனி பெரேரா ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
குருநாகல் மறைமாவட்ட பேராயரும், இலங்கை பேராயர்கள் சங்கத்தின் தலைவருமான ஹரல்ட் அந்தோனி பெரேராவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்தச் சந்திப்பு இன்று மாலை நிகழ்ந்துள்ளது.
கத்தோலிக்க மத விவகாரங்கள்
இதன்போது பேராயரின் சுகநலன்களை விசாரித்து அறிந்துக்கொண்ட ஜனாதிபதி, கத்தோலிக்க மத விவகாரங்கள் குறித்தும் பேராயருடன் கலந்துரையாடியுள்ளார்.
குருநாகல் மறைமாவட்ட துணைப் பேராயர் பியல் ஜானக பெர்னாண்டோ மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.