வழமைக்குத் திரும்பிய யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ சேவைகள்
யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ சேவைகள் கடந்த இரண்டு நாட்களின் பின்னர் இன்றையதினம் (1) வழமைக்குத் திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியர்களின் பணிப் புறக்கணிப்பால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்நோக்கி இருந்த நிலையில் இன்றுமுதல் மீண்டும் வைத்தியர்கள் சேவைக்கு திரும்பி உள்ளதை மகிழ்ச்சியுடன் நோயாளர்கள் வரவேற்றுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடந்த வியாழக்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.

வடக்கில் படைகள் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்! சிறீதரனின் கேள்விக்குப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பதில்
பேச்சுவார்த்தை
இதனால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள் பலரும் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியாமல் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி திரும்பிச் சென்றிருந்தனர்.
இந்தநிலையில், வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் வைத்தியர் சங்கத்திற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இணக்கம் காணப்பட்டது.
மருத்துவ சேவைகள்
இதனையடுத்து பொது மக்களின் நலன் கருதி தமது பணிப்புறக்கணிப்பை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்ள போவதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.
இதற்கமைய போதனா வைத்தியசாலையின் மருத்துவ சேவைகள் அனைத்தும் இன்று முதல் வழமைக்குத் திரும்பியுள்ளன.
அத்தோடு, எதிர்காலத்தில் நோயாளர்களைப் பாதிக்காத வகையில் வைத்தியசாலையின் அனைத்து தரப்பினர்களும் செயற்பட வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


