பிரபல பேராசிரியரிடம் மன்னிப்பு கோரிய ஊடக அமைச்சர்
ஊடக அமைச்சர் டலஸ் அழப்பெரும, ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு சக்தி பீடத்தின் பேராசிரியர் நீலிகா மலவ்கேயிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஊடகங்களில் தாம் வெளியிடும் கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருவதாக பேராசிரியர் நீலிகா குற்றம் சுமத்தியிருந்தார்.
ஊடகங்களின் சார்பில் தாம் பேராசிரியரை தொடர்பு கொண்டு மன்னிப்பு கோரியதாக அமைச்சர் டலஸ் தெரிவித்துள்ளார்.
30 முதல் 40 நிமிடங்கள் வரையில் இணையத்தில் தாம் வெளியிட்ட கருத்து ஒன்றின் ஒரு வரியை செய்தியாக்கி தமது கருத்தை ஊடகங்கள் திரிபுபடுத்திவிட்டதாக பேராசிரியர் குற்றம் சுமத்தயிருந்தார்.
குறிப்பாக பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்தை ஊடகங்கள் பிழையாக வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஊடக அமைச்சர் டலஸ், பேராசிரியரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
