சபாநாயகர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகவில்லை!ஊடகப்பிரிவு மறுப்பு
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகவில்லை என அவரது ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
சபாநாயகர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
சபாநாயகர் நாளைய தினம் முதல் வழமை போன்று தமது கடமைகளில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் பாதுகாப்புப் பிரிவில் தற்காலிகமாக பணியாற்றிய ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதியாகிருந்தது.
எனினும் அவருடன் நேரடித் தொடர்பை பேணிய உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று பரவவில்லை என்பது பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த உத்தியோகத்தர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.