ஊடகத்துறையையும் அத்தியாவசிய சேவையாக கருத வேண்டும்: சுப்பிரமணியம் தியாகு

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government Sri Lanka Fuel Crisis
By Thirumal Jul 04, 2022 01:15 PM GMT
Report

ஊடகத்துறையையும் அத்தியாவசிய சேவையாக கருதி ஊடகவியலாளர்களுக்கும் எரிபொருட்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுப்பிரமணியம் தியாகு கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ஹட்டனில் இன்று(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடகத்துறை

அவர் மேலும் தெரிவித்ததாவது,“நாட்டில் இன்று எல்லா இடங்களிலும் போராட்டங்கள் மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை வீதிக்கு வந்து போராட்டங்களை நடத்தியே அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றார்கள்.

ஊடகத்துறையையும் அத்தியாவசிய சேவையாக கருத வேண்டும்: சுப்பிரமணியம் தியாகு | Media Considered Essential Service

இதனை சரியான தரப்பினரிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ஊடகங்களே.ஆனால் ஊடகவியலாளர்கள் எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்கு எந்தவிதமான திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை.

இன்று நாட்டில் அநேகமான சேவைகளை அரசாங்கம் அத்தியாவசிய தேவைகளாக கருதுகின்றது. ஆனால் ஊடகத்துறையை அத்தியாவசிய தேவையாக கருதுகின்றதா?என்ற கேள்வி எமக்கு எழுகின்றது.

ஊடகத்துறையையும் அத்தியாவசிய சேவையாக கருத வேண்டும்: சுப்பிரமணியம் தியாகு | Media Considered Essential Service

ஊடகவியலாளர்கள் பல மணித்தியாலங்களாக அல்லது பல நாட்களாக வரிசைகளில் நின்று எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடியாது. அதற்கு காரணம் அவர்கள் களத்திற்கு சென்று மக்களுடைய பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரவேண்டிய பொறுப்பு உள்ளது.

எனவே அவர்கள் ஒரே இடத்தில் இருந்து கொண்டு அதனை செய்ய முடியாது. அவர்கள் தங்களுடைய கடமைகளை சரியாக செய்ய வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு எரிபொருட்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாஙத்தின் கடமையாகும்.

எரிபொருள் விநியோகம்

ஊடகத்துறையையும் அத்தியாவசிய சேவையாக கருத வேண்டும்: சுப்பிரமணியம் தியாகு | Media Considered Essential Service

இதனை மிகவும் இலகுவான முறையில் நடைமுறைபடுத்த முடியும். ஏனெனில் அரசாங்கத்தின் தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் ஊடாக இவர்களுக்கான எரிபொருட்களை மிகவும் இலகுவான முறையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

குறிப்பாக இன்று பிரதேச ஊடகவியலாளர்கள் காலையில் எழுந்தவுடன் அவர்களுக்கு இருக்கின்ற பிரச்சினை இன்றைய நாளுக்கான செய்திகளை எவ்வாறு தலைமையகத்திற்கு அனுப்புவது. சம்பங்கள் நடைபெறுகின்ற இடத்திற்கு எவ்வாறு செல்வது.அது மட்டுமல்லாமல் காரியாலயங்களில் கடமையில் இருக்கின்றவர்கள் தங்களுக்கான முறையான போக்குவரத்து இன்மை காரணமாக பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு ஊடகத்துறையையும் அத்தியாவசிய தேவையாக கருதி அவர்களுக்கான எரிபொருட்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US