முட்டைகளுக்கான தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை
முட்டை இறக்குமதி மற்றும் உள்ளுர் முட்டை உற்பத்தியை அதிகரிப்பதற்காக பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
முட்டை பண்ணை உரிமையாளர்கள் சங்கம், வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு, விவசாய அமைச்சு, கால்நடை இராஜாங்க அமைச்சு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் பங்களிப்புடன் விவசாய அமைச்சில் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பிலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
மக்கள் எதிர்நோக்கும் போசாக்கு குறைபாடு
இந்த நேரத்தில், நாட்டில் உள்ள முட்டை தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், மக்கள் எதிர்நோக்கும் போசாக்கு குறைபாடுகளுக்கு தீர்வு காண்பதில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உள்ளூர் முட்டைகளின் தினசரி தேவை 07 மில்லியன் ஆகும்.
தற்போது, உள்ளூர் முட்டை உற்பத்தி நாளொன்றுக்கு 5.2 மில்லியனாக அதிகரித்துள்ளதுடன், நாளாந்த தேவைக்கான முட்டைகளுக்கு சுமார் 1.4 மில்லியன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையை போக்க முட்டைகளை இறக்குமதி செய்வதில் இனி எந்த பிரச்சனையும் இல்லை என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் முட்டை உற்பத்தி அதிகரிப்பு
எவ்வாறாயினும், இந்த வருட இறுதிக்குள், உள்ளூர் முட்டை உற்பத்தி அதிகரிப்புடன், இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள முட்டைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பணி ஒழுங்கு இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மனைவியை இழந்து, கடனில் தத்தளித்து... நடிகையுடன் திருமணம்: இன்று ரூ 4,000 கோடி சொத்துக்களுக்கு உரிமையாளர் News Lankasri

Viral Video: இந்த பை போதுமா? திருமணம் முடிந்த கையோடு ஐயர் பார்த்த வேலை.. கேமராவில் சிக்கிய காட்சி Manithan

இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ள ரிலையன்ஸ் - ரூ.10,000 கோடி லாபம் எதிர்பார்ப்பு News Lankasri
