அக்கரைப்பற்றில் மேயர் அதாவுல்லாவின் பங்கேற்புடன் நடைபெற்ற 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம்
அரசின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை பிரதேசங்கள் துப்பரவு செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஐயந்தலால் ரத்னசேகரவின் ஆலோசனையின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஸட்.ஏ.எம். பைசாலின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் இந்த வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்
இதன்போது சுமார் 2.5 கிலோமீட்டர் அளவிலான கடற்கரைப் பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக கடற்கரைப் பிரதேசங்களை பேணிப் பாதுகாப்பது தொடர்பிலான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் அக்கரைப்பற்று மாநகர மேயர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையில் இடம்பெற்றது.
இதில் அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர், பிரதி மேயர் உட்பட உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.



1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 18 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri