மலையகக் கட்சிகளின் மே தினப் பேரணிகள் இம்முறை இல்லை!
மலையகப் பிரதான அரசியல் கட்சிகள் இன்றைய மே தினத்தில் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்தவில்லை என அந்தந்தக் கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தமது கட்சி மே தினக் கூட்டங்களையோ கொண்டாட்டங்களையோ நடத்தாமல், அதற்குப் பதிலாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த தோட்டத் தொழிலாளர்களின் 200 ஆவது ஆண்டு நிறைவை எதிர்காலத்தில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேசிய தொழிலாளர் சங்கம்
அதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்த மே தினத்தில் பேரணிகளையோ கூட்டங்களையோ நடத்தாமல் மாறாகத் தோட்டங்களுக்குள் சமய நிகழ்வுகளை நடத்துகின்றது.எனக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஏ. பி. சக்திவேல் கூறியுள்ளார்.
இதற்கமைய தேசிய தொழிலாளர் சங்கம் இந்த ஆண்டு மே தினப் பேரணிகளையோ கூட்டங்களையோ நடத்தாமல் தோட்டங்களில் சிறு கொண்டாட்டங்களை நடத்துகின்றது என அதன் பிராந்திய பணிப்பாளர் என். ஆர். இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
