அநுரவின் ஆட்சியில் மே 18 இல் முள்ளிவாய்க்காலில் நடந்த இரகசிய நடவடிக்கை!
கடந்த வாரம் 18 ஆம் திகதி உலகெங்கிலுமுள்ள தமிழர்களால் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டது மற்றும் மக்களின் அணிதிரள்வு என்பது தொடர்பில் இலங்கை இராணுவ புலனாய்வாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்திருந்தனர்.
ஆனால் இதனை விடவும் மிக முக்கியமான ஆபத்தான ஒரு சம்பவம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நடைபெற்றுள்ளது.
ஜார்மர் (Network Jamer) முறையிலான யுத்த முறைமை தொடர்பில் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
அதாவது முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தன்று அந்த பகுதியில் இணைய வசதிகள் தடை செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காரணம் இந்த ஜார்மர் (Network Jamer) தாக்குதல் பலராலும் உணரப்பட்டாலும் அதனை அவர்களுக்கு வெளிப்படுத்த தெரியவில்லை.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தன்று, அநுரவின் ஆட்சியில் நடந்த இரகசிய நடவடிக்கை குறித்து அலசி ஆராய்ந்து முழு விபரங்களையும் இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி வழங்குகின்றது...,
