வடக்கில் ஆபத்தான முறையில் நடந்த மோட்டார் சைக்கிள் பேரணி.. பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
கடந்த 18ஆம் திகதி, போக்குவரத்து விதிகளை மீறி, அபாயகரமான முறையில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்திய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 ஆம் திகதி தமிழ் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு விஸ்வமடு சந்தியில் ஒன்றுகூடிய குழுவினர், தலைக்கவசம் (Helmet) அணியாமலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் முல்லைத்தீவு வீதி ஊடாக வெல்லமுள்ளிவாய்க்கால் நோக்கி மோட்டார் சைக்கிள்களில் பயணித்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
பரவி வந்த காணொளிகள்..
இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், குறித்த பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை விரிவாக ஆய்வு செய்துள்ளனர்.

எனினும், மோட்டார் சைக்கிள்களின் பதிவு எண்களைக் கண்டறிவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, விசாரணைகளுக்குக் கூடுதல் காலம் தேவைப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய, அடையாளம் காணப்பட்ட மோட்டார் சைக்கிள் இலக்கத் தகட்டின் அடிப்படையில் கிளிநொச்சி, கேரக்கன்காடு பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உரிமையாளரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன், தீவிர தேடுதலின் பின்னர் இன்று காலை முல்லைத்தீவு பொலிஸாரால் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.
அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து பாதுகாப்புப் படையினரால் உத்தியோகபூர்வ விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இலங்கையின் எந்தப் பகுதியிலும் இனம், மதம் அல்லது அந்தஸ்து பாராது, சட்டங்கள் அனைவருக்கும் சமமாக நடைமுறைபடுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You may like this..
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
குடியேற்றவாசிகளின் வன்முறை: மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து..அவசர அழைப்பு விடுத்த ஜேர்மனி News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam