பொருட்கள் மீதான அதிகபட்ச சில்லறை விலை தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
எதிர்காலத்தில் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று (16.12.2024) ஊடகங்கள் மத்தியில் பேசியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உற்பத்தி செலவுகளுக்கும் சந்தை விலைக்கும் இடையிலான வேறுபாட்டை எடுத்துரைத்த அவர், 100க்கு விற்கப்படும் தண்ணீர் போத்தலை 40ரூபாய்க்கும் குறைவாக விற்கலாம்.
நுகர்வோர் மீதான அழுத்தம்
அத்துடன், 52 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு 100க்கு விற்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

உப்பு மற்றும் பிற துறைகளில் உள்ள திறமையின்மை காரணமாகவே, அத்தியாவசியப் பொருட்களின் அதிக சில்லறை விலை நுகர்வோர் மீது தேவையற்ற சுமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், நுகர்வோர் மீதான அழுத்தத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகள் விரைவில் இறுதி செய்யப்பட்டு செயற்படுத்தப்படும் என்று அமைச்சர் சமரசிங்க உறுதியளித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri