மாவனல்லையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
மாவனெல்லை (Mawanella) படிதொர கிராமத்தில் வசிப்பவர்களை அச்சுறுத்தி பெண்ணொருவரை பணயக்கைதியாக வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாவனெல்லை பகுதியை சேர்ந்த ஜயதிலக்க என்ற 52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் கூரிய வாள்களுடன் மக்களை அச்சுறுத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், உயிரிழந்த நபர் பெண் ஒருவரை பணயக்கைதியாக வைத்திருப்பதை அவதானித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகம்
இதனையடுத்து குறித்த பெண்ணை காப்பாற்ற சென்ற போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை அவர் வாளால் தாக்கியுள்ளார்.
இதன்போது குறித்த பெண்ணை காப்பாற்ற சந்தேகநபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் சிகிச்சைக்காக மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
