மாவை சேனாதிராஜாவின் மறைவு இலங்கைத் தமிழ் மக்களுக்கு பேரிழப்பு: கே.அண்ணாமலை
இலங்கைத் தமிழர்களின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான, மாவை சேனாதிராஜாவின் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று பாரதீய ஜனதாக்கட்சியின், தமிழகத் தலைவர் கே.அண்ணாமலை(K.Annamalai) தெரிவித்துள்ளார்.
மாவை சேனாதிராஜாவின்(Mavai Senathirajah) மறைவையொட்டி கே. அண்ணாமலை வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாவையின் மறைவு
குறித்த செய்தியில்,
“அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டவர். இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராகவும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
தமிழக மக்கள் மீது பெரும் அன்பு கொண்டவர். இலங்கை தமிழ் மக்கள் நல்வாழ்வுக்காக, நமது மத்திய அரசு மேற்கொண்ட நலத்திட்டங்கள் தொடர்பாக, வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.
மாவை சேனாதிராஜாவின் மறைவு, இலங்கைத் தமிழ் மக்களுக்கும், தனிப்பட்ட முறையில், எனக்கும் பேரிழப்பு.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகைக்கும், இந்த பிரபலத்திற்கும் மறுமணமா?... வெளிவந்த தகவல் Cineulagam