அரசியல்வாதிகள் இல்லாமல் மாத்தளையில் திறந்து வைக்கப்பட்ட ஹொக்கி மைதானம்
மாத்தளையில் புனரமைக்கப்பட்ட நந்திமித்ர ஏகநாயக்க சர்வதேச செயற்கை ஹொக்கி மைதானம், எந்தவொரு அரசியல்வாதியும் இன்றி நேற்று (05.12.2024) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மற்றும் ஆசிய ஹொக்கி கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்களால் முறையே 110 மில்லியன் மற்றும் 50 மில்லியன் ரூபாய்கள் இதற்காக பங்களிக்கப்பட்டுள்ளன.
மைதானம் இப்போது ஒரு நவீன செயற்கை ஹொக்கி புல்வெளியைக் கொண்டு, சர்வதேச தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பாரம்பரியத்துக்கு புறம்பான நிகழ்வு
இதேவேளை, பாரம்பரியத்துக்குப் புறம்பாக, சிறப்பு அழைப்பாளர்களோ, அரசியல் பிரமுகர்களோ இல்லாமல் நேற்றைய விழா நடைபெற்றது.
அகில இலங்கை ரீதியில் 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலைகளுக்கான ஹொக்கி போட்டியுடன் மைதானம் திறந்து வைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
