முல்லைத்தீவு குமுழமுனை மகா வித்தியாலயத்துக்கு முன் பாரிய ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு குமுழமுனை மகா வித்தியாலயத்தின் முறைகேடான இடமாற்றங்கள் மற்றும் ஆசிரியர் ஒருவரை அதிபராக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவு ஆகியவற்றுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்றையதினம்(22.09.2025) குமுழமுனை மகா வித்தியாலயத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கான மனு, ஆளுநர், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள், முல்லைத்தீவு அரசாங்க அதிபர், வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பப்படவுள்ளது.
மனு
ஆளுநருக்குரிய மனுவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கான மனுவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் போராட்டக் களத்தில் வைத்து கையளிக்கப்பட்டிருந்தது.
பாடசாலைக்கு வருகை தந்திருந்த முல்லை கோட்டக்கல்வி பணிப்பாளர் திருக்குமரனிடம் குறித்த விடயம் தொடர்பில் வினவிய போது, தாம் ஊடகங்களுக்கு கருத்து கூற முடியாதெனவும் வலயக்கல்வி பணிப்பாளரே கருத்து கூற முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.
குறித்த போராட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான வீ.கலைச்செல்வன், ஜெ.சிவசாந்தி, பெற்றோர் ஆசிரிய சங்கத்தினர், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




