சீனி இறக்குமதியில் இடம்பெறும் பாரிய மோசடி: வெளியான தகவல்
கடந்த காலத்தில் பாரிய சீனி மோசடியில் ஈடுபட்ட அதே சீனி இறக்குமதியாளர், அண்மையில் சீனி இறக்குமதி மீதான வரி அதிகரிப்புக்குப் பின்னர், இரண்டாவது தடவையாகவும் மோசடியிலும் ஈடுபட்டார் என ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
அரசாங்கம், சீனி மீதான இறக்குமதி வரியை 25 சதத்தில் இருந்து 50 ரூபாவாக கடந்த வாரம் அதிகரித்தது.
16 பில்லியன் ரூபாய் மோசடி
இது, குறிப்பிட்ட சீனி இறக்குமதியாளர் அதிக இலாபத்தை ஈட்ட அனுமதித்துள்ளது. இந்த இறக்குமதியாளர் அக்டோபர் 30 ஆம் திகதி வரி அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் 8,600 மெட்ரிக் டன் சீனியை இறக்குமதி செய்துள்ளார்.
இதன்போது ஒரு கிலோவுக்கு 25 சதம் என்ற வரியில் சுங்கத்திலிருந்து அந்த இருப்பை விடுவித்துள்ளார்.
இந்தநிலையில் வரி அதிகரிப்பின் பின்னர், குறித்த சீனி இறக்குமதியாளர், இறக்குமதி செய்யப்பட்ட கையிருப்பு சீனியை 100 ரூபா அதிகமாக விற்பனை செய்வதாக கூறியுள்ளார்.
மேலும் அவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த இறக்குமதியாளர் மேற்கொண்ட சீனி ஊழலில் 16 பில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் தாம் உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததையும் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.





நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
