அக்மீமன பகுதியில் சிலரின் கொடூரச் செயல்
காலி - அக்மீமன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஆண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் தல்கம்பொல பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றில் இந்த கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீண்ட நாட்களாக ஏற்பட்டுவந்த தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் தற்போது பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் காலி, தல்கம்பொல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்மீமன பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.