நோன்பு காலத்தில் அம்பாறை - மருதமுனை மத்ரஸா பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்ந்த கொடுமை
அம்பாறை - மருதமுனை பிரபல ஆண்கள் மத்ரஸா பாடசாலை மாணவர்களை வெயிலில் முழங்காலில் நிறுத்தி தண்டனை வழங்கப்பட்ட காணொளியானது சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களுக்குள்ளாக்கியுள்ளது.
உரிய நேரத்திற்கு நித்திரை கொள்ளாமையினால் அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தினை நேரில் கண்ட ஒரு சமூக ஆர்வலர் மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதை காணொளியாக பதிவு செய்துள்ளார்.
மத்ரஸா நிர்வாகம்
அத்துடன், நோன்பு காலத்தில் மாணவர்களுக்கு இவ்வாறான தண்டனைகளை வழங்குவது குறித்து தனது ஆதங்கத்தை மத்ரஸா நிர்வாகத்தினரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, முழங்காலில் நின்ற மாணவர்கள் எழுந்து அந்த இடத்தை விட்டு சென்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |