தமிழருக்கான நீதியை பெற கனடா தொடர்ந்து முயற்சிக்கும்.. மார்க் கார்னி உறுதி!
தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், "இலங்கையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்ற போரின் ஆயுத மோதல் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்த தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில், இழந்த உயிர்களை - துண்டாடப்பட்ட குடும்பங்களை, பேரழிவிற்குள்ளான சமூகங்கள் மற்றும் இன்றுவரை காணாமல் போனவர்களை நினைவு கூருகிறோம்.
தமிழ் இனப்படுகொலை
கனடாவின் தமிழ் சமூகத்தையும் நாங்கள் நினைவு கூருகிறோம், அவர்கள், தங்களது அன்புக்குரியவர்களின் நினைவையும், கனடா முழுவதும் திட்டமிடப்பட்ட பல நினைவுச் சேவைகளையும் கொண்டு செல்கிறார்கள்.
எனவே, தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறலைத் தேடுவதற்கும் உண்மை மற்றும் நீதிக்காக அழுத்தம் கொடுப்பதற்கும் சுயாதீனமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்து ஆதரிக்கிறது.
இந்த புனிதமான ஆண்டு நிறைவை நாம் நினைவுகூரும் வேளையில், அஞ்சலி செலுத்தும் விதமாகவும், தைரியத்துடனும், நீடித்த அமைதிக்காகவும் செயல்படுவதற்கான நமது உறுதியை வலுப்படுத்தட்டும்" என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
