சி.வீ.கே .சிவஞானம்- சுமந்திரன் தமிழரசுக்கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள்! மறவன்புலவு சச்சிதானத்தன் காட்டம்
இலங்கை தமிழரசுக்கட்சி கடந்த 12 ஆண்டுகளாக பல உறுப்பினர்களை நீக்கியுள்ளது என்று சிவசேனை அமைப்பின் இலங்கைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானத்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
பல உறுப்பினர்களை அதற்கு அடித்தளமாக இருந்தவர் கிருஸ்தவ பாதிரியார் சுமந்திரன் ஆவார். கிருஸ்தவ பாதிரியாருடைய சபையாக தமிழரசுகட்சியை மாற்ற வேண்டும் என்ற நோக்கதுடன் தமிழரசுகட்சியின் தூண்களையெல்லாம் நீக்கிவிட்டார்.
தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களையெல்லாம் நீக்கிவிடுகின்றார்கள். தற்போது , தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனின் பதவியையும் நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் சி.வீ.கே .சிவஞானமும், சுமந்திரனும் தான் நீக்கப்பட வேண்டியவர்கள் என்று குறிப்பிட்டார்.
முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க.
[
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri