நல்லூரின் நிர்வாக அதிகாரியாக குமரேஷ் சயந்தன் குமாரதாஸ் மாப்பாண முதலியார் கடமையேற்பு
நல்லூர் ஆலயத்தின் பதினோராவது நிர்வாக அதிகாரியாக குமரேஷ் சயந்தன் குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள் இன்றைய தினம் பொறுப்பேற்றார்.
நல்லூர் ஆலயத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக இருந்த குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியார் கடந்த 09ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் கடமையினை பொறுப்பேற்ற குமரேஸ் சயந்தன் குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள் தொடர்ந்து நிர்வாகத்தினை நடாத்திச் செல்லவுள்ளார்.
இன்று காலை ஆலயத்திற்கு சென்ற குமரேஸ் சயந்தன் குமாரதாஸ் மாப்பாண முதலியார்
பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.