இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய செமெரு எரிமலையில் சிக்கி பலர் பலி
இந்தோனேஷியா, ஜாவா தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள செமெரு (Semeru) எரிமலை வெடித்ததில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் ஏழு பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த எரிமலை பள்ளத்தின் வாயிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என புவியியல் ஆய்வு மையத்தின் தலைவர் எகோ புடி லெலோனோ கூறியுள்ளார்.
பல நூற்றுக்கணக்கான மக்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கும் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என லுமாஜாங் மாவட்டத் தலைவர் தோரிகுல் ஹக் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி........
சாம்பலும் புகையுமாக காட்சியளிக்கும் இந்தோனேஷியா - ஏற்பட்ட அனர்த்தம் (VIDEO)