இலங்கையில் மேலும் பலர் கோவிட் தொற்றுக்கு பலி!
இலங்கையில் மேலும் 28 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1269 ஆக உயர்ந்துள்ளது.
இந்த மரணங்கள் மே 18ம் திகதி முதல் நேற்று வரையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் ஐந்து கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது.
மே 18ம் திகதி முதல் 24ம் திகதி வரையில் 23 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில், 18ம் திகதி ஒருவரும், 19ம் திகதி நால்வரும், 20ம் திகதி இருவரும், 21ம் திகதி ஒருவரும், 22ம் திகதி இருவரும், 23ம் திகதி நால்வரும், 24ம் திகதி ஒன்பது பேரும் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, இன்று இதுவரையில் 2,706 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் 169,878 பேருக்கு இதுவரை கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,228 பேர் இன்று (25) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 141,175 ஆக அதிகரித்துள்ளது.


