வவுனியாவில் மழை காரணமாக பல குடும்பங்கள் பாதிப்பு (Photos)
புதிய இணைப்பு
வவுனியா திருநாவற்குளத்தில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தமையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மழை காரணமாக திருநாவற்குளம் பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளிற்குள் வெள்ளநீர் உட்புகுந்தமையால் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
இதனால் இவ்வீடுகளில் வசிப்பவர்கள் தற்போது உறவினர்கள் வீடுகளில் வசித்து வருகின்றனர்.
அத்தோடு இப்பகுதியின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பிரச்சினை மழை காலங்களில் தமக்கு ஒவ்வொரு வருடமும் ஏற்படுவதாக இப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வவுனியாவில் பெய்து வரும் மழை கராணமாக 9 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியாவில் கடந்த மூன்று தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது.
இதன் காரணமாக குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து பல குளங்கள் வான் பாய்ந்து வருவதுடன், தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
அதனடிப்படையில் குளம் ஒன்று வான் பாய்வதன் காரணமாக வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்குண்ணாமடு கிராமத்தில் வெள்ள நீர் காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
அத்துடன், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நேரியகுளம் கிராம அலுவலர் பிரிலில் உள்ள இலுப்பைக்குளம் வான் பாய்வதன் காரணமாக 8 குடும்பங்களைச் சேர்ந்த 35 குடும்பங்கள் பதிப்படைந்துள்ளதுடன், அப் பகுதியின் போக்குவரத்து பாதைகளும் வெள்ள நீரில் முழ்கியுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக மக்களது இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன், பாடசாலைகளுக்கு மாணவர் வருகையும் குறைவாக காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 22 மணி நேரம் முன்
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri