வவுனியாவில் மழை காரணமாக பல குடும்பங்கள் பாதிப்பு (Photos)
புதிய இணைப்பு
வவுனியா திருநாவற்குளத்தில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தமையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மழை காரணமாக திருநாவற்குளம் பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளிற்குள் வெள்ளநீர் உட்புகுந்தமையால் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
இதனால் இவ்வீடுகளில் வசிப்பவர்கள் தற்போது உறவினர்கள் வீடுகளில் வசித்து வருகின்றனர்.
அத்தோடு இப்பகுதியின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பிரச்சினை மழை காலங்களில் தமக்கு ஒவ்வொரு வருடமும் ஏற்படுவதாக இப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வவுனியாவில் பெய்து வரும் மழை கராணமாக 9 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியாவில் கடந்த மூன்று தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது.
இதன் காரணமாக குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து பல குளங்கள் வான் பாய்ந்து வருவதுடன், தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
அதனடிப்படையில் குளம் ஒன்று வான் பாய்வதன் காரணமாக வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்குண்ணாமடு கிராமத்தில் வெள்ள நீர் காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
அத்துடன், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நேரியகுளம் கிராம அலுவலர் பிரிலில் உள்ள இலுப்பைக்குளம் வான் பாய்வதன் காரணமாக 8 குடும்பங்களைச் சேர்ந்த 35 குடும்பங்கள் பதிப்படைந்துள்ளதுடன், அப் பகுதியின் போக்குவரத்து பாதைகளும் வெள்ள நீரில் முழ்கியுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக மக்களது இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன், பாடசாலைகளுக்கு மாணவர் வருகையும் குறைவாக காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கையில் ‘தினமென்’ சதுக்கமும், ஐ. நா.வில் வீட்டோவும் 20 மணி நேரம் முன்

நீரிழிவு முதல் மாரடைப்பு, பக்கவாதம் வரை ஓட ஓட விரட்டியடிக்கும் டீ...எவ்வளவு குடிக்கனும் தெரியுமா? Manithan

ரஷ்யாவின் அணு ஆயுத மிரட்டலை துச்சமாக மதித்து மற்றொரு நாடு எடுத்துள்ள துணிச்சலான முடிவு News Lankasri

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் 3 நாள் பட்டய கிளப்பும் வசூல்- தமிழகத்தில் மட்டும் இவ்வளவா? Cineulagam

கசந்து போன முதல் திருமணம்! மறுமணம் புரிந்த 5 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள்... தமிழர் உட்பட News Lankasri

சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் க்ளிக்- செம வைரல். சூப்பர் ஜோடி Cineulagam

ரஷ்யாவின் அடி மடியிலேயே கைவைத்த உக்ரைன்! சக்தி வாய்ந்த ராக்கெட் லாஞ்சரை தட்டிதூக்கிய வீடியோ News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022