நீண்ட நேர விசாரணைகளுக்கு பின் சி.ஐ.டியிலிருந்து வெளியேறிய மனுஷ
புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இன்று (21) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற நிலையில் சுமார் 6 மணித்தியாலங்கள் அங்கு விசாரணைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய, அவர் இன்று (21) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி இன்றையதினம் (21) வாக்குமூலம் வழங்கவுள்ளார்.
தென்கொரியாவில் விவசாய மற்றும் கடற்தொழில் தொழில்துறைகளுக்காக பணியாளர்களை அனுப்புவதற்காகக் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் வாக்குமூலம் அளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னெடுக்கப்படும் விசாரணைகள்
இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் முன்பிணை கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு நேற்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, முன்னாள் அமைச்சர் மனுஷ இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்கத் தயார் என அவரது சட்டத்தரணிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் எழுத்து மூலம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை கைது செய்வதற்கான எந்த காரணங்களும் முன்வைக்கப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தமது கட்சிக்காரர் கைது செய்யப்படக் கூடும் என ஏற்பட்ட அச்சம் காரணமாக முன்பிணை கோரிய மனுத் தாக்கல் செய்யப்பட்டதாக மனுஷ நாணயக்கார சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அறியப்படுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 13 மணி நேரம் முன்
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam