தமிழ் கைதிகளை படுகொலை செய்யும் சூழ்ச்சியில் சிறைக்கு சென்றாரா லொஹான்? வெளியிடப்பட்டுள்ள சந்தேகம்
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை படுகொலை செய்வதற்கான சூழ்ச்சியுடனேயே லொஹான் ரத்வத்த சிறைக்கு வந்திருப்பார் என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் சிறையிலுள்ள தமிழ்க் கைதிகளை சந்திக்க அவர் இன்றைய தினம் சென்றபோது சிறைக்குள் பிரவேசிக்க அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
இருந்த போதிலும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டதன் பின்னர் சபாநாயகரது பணிப்புரைக்கமைய, அவர்கள் உட்பிரவேசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கைதிகளுடன் சந்திப்பை நடத்திய பின்னர் அங்கிருந்து திரும்பிய மனோ கணேசன் ஊடகங்களிடம் குறித்த சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,