தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் இணைவு குறித்து மனோ கணேசன் கருத்து
தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை இணைத்து நாடாளுமன்றத் தேர்தலை முகங்கொடுப்பதற்கான முயற்சி கைவிடப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வடக்கு கிழக்கை மையப்படுத்தி இயங்குகின்ற தமிழ்த் தேசிய கட்சிகள், மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகள் என்பன இணைந்து ஒரு அணியாகச் செயற்படுவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன.
புரிந்துணர்வு
எனினும், ஏனைய கட்சிகள் இந்த யோசனை தொடர்பான முன்னெடுப்புகளை மேற்கொள்ளாத நிலையில், இந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக மனோ கணேசன் கூறியுள்ளார்.
மேலும், பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் குறித்த கட்சிகள் புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
