இளைஞர்களுக்கு மனோ கணேசன் விடுத்துள்ள கடுமையான அறிவுறுத்தல்
கடைசியில் இளைஞர்கள் கிளர்ச்சியில் எழுந்து வந்து தலைமைத்துவ இடத்தை பலாத்காரமாக பிடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கின்றது எனவும் அதற்கு இடம்கொடுக்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக இளையோர் கூட்டணினருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜனநாயக இளையோர் கூட்டணியினரின் செயற்பாட்டில் இந்த நாட்டில் இருக்ககூடிய பன்மைத்தன்மை வாய்ந்த நாடாக ஏற்றுகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளேன். அதனை அவர்களும் ஏற்றுகொண்டுள்ளார்கள். அது தான் அவசியமானதாகவும் இருக்கின்றது.
இலங்கையர் என்ற உணர்வு
இன்றைய புதிய தலைமுறை இளைஞர்கள் மத்தியிலே இலங்கையர் என்ற உணர்வு ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
இந்த நாட்டில் இளைஞர்களுக்கு இடம் கொடுப்போம் இளைஞர்களுக்கு தலைமைத்துவம் வழங்குவோம் என கூறிக்கொள்ளும் பெரிய வயதானவர்கள் கடைசி வரை அந்த சந்தர்ப்பத்தை தருவதே இல்லை அப்படியிருக்கக் கூடாது.
கடைசியில் இளைஞர்கள் கிளர்ச்சியில் எழுந்து வந்து அந்த இடத்தை பலாத்காரமாக பிடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கின்றது. அதற்கு இடம்கொடுக்க கூடாது.
அதேவேளை இளைஞர்களும் கூட, இளைஞர்கள் என்ற ஒரே காரணத்திற்காக தலைவர்கள் ஆகிவிட முடியாது. நேர்மை, தூர பார்வை, ஐக்கியம், ஒற்றுமை இருக்கவேண்டும். குறைந்த பட்சம் இரு மொழிகளை பேச தெரிந்திருக்க வேண்டும் என்றார்.
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி! உடனடி தடை குறித்து நிதியமைச்சிற்கு மத்திய வங்கி அறிவிப்பு |