யாழில் ஜனாதிபதி ரணிலை சாடிய மனோ (Video)
பொதுஜன பெரமுனவை பிரிக்கும் வேலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கச்சிதமாக ஈடுபட்டு வருகிறார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அடுத்துவரும் நாட்களில்
வர்ணமயமான காட்சிகளை எதிர்பார்க்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (02.08.2023) காலை ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
சஜித் எங்கள் கூட்டணிக்கே
ரணில் விக்ரமசிங்கவையும் சஜித் பிரேமதாசவையும் இணைப்பதற்கான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.
எல்லாவற்றையும் ஊடகங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சஜித் பிரேமதாச எங்கள் கூட்டணிக்கே தலைவரொழிய சஜித் பிரேமதாச எனக்கு தலைவர் அல்ல.
வடக்குக் கிழக்கில் இருக்கக்கூடிய அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் தமது இலக்காக சமஸ்டியை தான் முன்வைத்திருக்கிறார்கள். இதில் மாற்று கருத்து எதுவும் இல்லை, அனைத்து தேர்தலிலும் இவ்வாறான ஒரு இலட்சியத்தை முன்வைத்து தான் வாக்குகளை கேட்டார்கள்.
நான் கூட கடந்த வடமாகாண சபையின் முதலாவது தேர்தலின் போது இங்கு வந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேன், ஆகவே மக்கள் ஆணை வழங்கப்பட்டு இருக்கின்றது.அனைவருக்கும் சமஸ்டிகாக தான். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சொல்லுகிறார் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, கூட்டாட்சி என்றால் என்ன கூட்டாட்சி என்றாலும் சமஸ்டி தான், ஆனால் அதை அடையும் வழிமுறைகளில் தான் ஒவ்வொருவரும் மாறுப்படுகின்றார்கள்.
சமஸ்டி என்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மாத்திரம் தனி உடமையல்ல அது எல்லோருக்கும் பொதுவுடமை, அது தந்தை செல்வா காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆகவே நாம் எல்லோரும் சேர்ந்து அதாவது தமிழ் தேசிய கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், மலையக கட்சிகள் எல்லோரும் சேர்ந்து ரணில் விக்ரமசிங்கமிடம் கோரிக்கை விடுப்போம்.
அதாவது தயவு செய்து முதலில் வடக்கு கிழக்கில் ஆவது மாகாண சபை தேர்தலை நடத்துங்கள் என்று சொல்லுவோம்.அதற்கு இந்திய ஆதரவளிக்கும். அந்த மாகாண சபை தேர்தலிலே போட்டியிடுகின்ற காட்சிகள் தமது கோரிக்கைகளை முன்வைக்கின்ற போது மக்கள் யாருக்கு வாக்களிக்கின்றார்கள் என்பதை பார்த்து, அதுவே மக்கள் ஆணை அன்று எடுத்துக் கொள்வோம். அதை வைத்துக் கொண்டு இலங்கை அரசாங்கத்திடம் அதாவது ரணிலாக இருக்கலாம், நாளை சஜித் வரலாம், அனுரகுமார வரலாம் இப்படி யாரும் வரலாம் அவர்களோடு இணைவோம், இந்திய அரசாங்கத்துடனும் இணைவோம் அதைத்தான் சரியான பாதையாக இருக்கும் என்பதை நான் நட்புறவுடன் ஈழத் தமிழ் உறவுகளுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |