கைவிடப்படும் நிலையில் மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலையப் பணிகள்
மன்னார், சிலாவத்துறை பிரதேசத்தை மையமாகக் கொண்டு உருவாக்கத் திட்டமிடப்பட்டிருந்த காற்றாலை மின்னுற்பத்தி நிலையப் பணிகள் கைவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கான போதிய நிதிவளம் இன்மை காரணமாகவே மின்சார சபை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
நிதிவளம் இன்மை
தற்போதைய நிலையில் காற்றாலை மின்னுற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான காணிகள் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் அப்பிரதேசத்தில் காற்றாலை அமைக்கப்படுவதன் காரணமாக வலசை வரும் பறவையினங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது தொடர்பில் சாத்திய வள அறிக்கை தயாரிக்கப்படும் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக மின்சார சபையின் தகவல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து நெல்சன் எடுக்கும் படம்.. ஹீரோ, ஹீரோயின் இவர்களா.. சூப்பர் ஜோடி தான் Cineulagam

கனடாவுக்குச் செல்லவேண்டாம்... பிரித்தானியா அல்லது அமெரிக்காவுக்குச் செல்ல சர்வதேச மாணவர்களுக்கு ஆலோசனை News Lankasri
