வரலாற்று சிறப்பு மிக்க திருக்கேதீஸ்வர ஆலய இரதோற்சவம்(Photos)
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்று சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய இரதோற்சவம் இன்று(01.06.2023) இடம்பெற்றுள்ளது.
திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த புதன் புதன் கிழமை (24.05.2023) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் பூஜைகள் இடம் பெற்றதையடுத்து தொடர்ந்து கொடி தாம்பத்திற்கு அபிஷேகம் செய்து ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.
பெருமளவிலான பக்தர்கள்
இதனையடுத்து ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் கொடியேற்றம் இடம் பெற்றது.
நாளை (02.06.2023) ஆம் தீர்த்த திருவிழாவில் இடம்பெற உள்ளமை
குறிப்பிடத்தக்கது.
பெருமளவிலான பக்தர்கள் இதில் பக்திபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.
மேலதிக செய்தி: ஆஷிக்