கிறிஸ்தவ ஆலயத்தில் பல இலட்சம் ரூபாய் பணம் திருட்டு: மன்னாரில் சம்பவம்
மன்னார்- தோட்டவெளி புனித வேத சாட்சிகளின் இராக்கினி ஆலயத்தில் உள்ள இரு உண்டியல்கள் உடைக்கப்பட்டு பல இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் எருக்கலம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டவெளி புனித வேத சாட்சிகளின் இராக்கினி ஆலயத்தில் உள்ள இரு உண்டியல்கள் உடைக்கப்பட்டு பல இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த திருட்டுச் சம்பவம் நேற்று (03.09.2023) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆலயம் 1544 ஆண்டு வரலாற்றுச் சிறப்பை கொண்ட ஆலயமாகும். மற்றும் அக்காலம் தொட்டு இன்று வரை இவ்வாலயம் சிறிய ஒரு ஆலயமாகவே காணப்பட்டு வருகிறது.
பொலிஸ் விசாரணை
மேலும், ஆலயத்திற்கு நாடளாவிய ரீதியில் யாத்திரிகர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வந்து போவதையும் அவர்கள் ஆலய வளாக பிரதான பகுதியில் உள்ள மணல் மற்றும் எடுக்கப்படும் மனித எலும்புத் துண்டுகளையும் எடுத்து சென்று தமது வேண்டுதல்களை நிறைவேற்றும் புதுமை மிகு ஆலயமாக திகழ்கிறது.
இவ்வாறான சிறப்பை கொண்ட குறித்த ஆலயத்தின் பிரதான உண்டியல்கள் நேற்று இரவு இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது.
கள்வாடப்பட்ட உண்டியலில் உள்ள பணம் ஆலய தேவைக்காக கடந்த இரண்டு வருடங்களாக எடுக்காமல் விட்டு வைத்திருந்த நிலையில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு உண்டியல்களுக்குள்ளும் பல இலட்சம் ரூபாய் பணம் இருக்கலாம் என ஆலய காப்பாளர் மற்றும் கிராமத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு எருக்கலம்பிட்டி பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
திருட்டு சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
