சமூகம் சார்ந்த விடயத்தில் தற்போதைய அரசாங்கத்தில் நம்பிக்கை இல்லை!
சமூகம் சார்ந்த விடயத்தில் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடு தமக்கு நம்பிக்கை அளிக்கவில்லை என மன்னார் மாவட்ட சமூக செயற்பாட்டாளர் அப்துல் சலாம் அஸ்லாம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம்களிற்கும் சிங்களவர்களிற்கும் இடையே ஒரே அமைப்பில் இருந்து பணம் வழங்கப்பட்டு இன ரீதியான முரண்பாடு ஏற்படுத்துவதற்கான வேலைத்திடங்களை கடந்த கால அரசாங்கம் செய்ததாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்து இருந்தார்.
அத்தோடு, அவ்வாறான செயற்பாடுகளை தாம் செய்யவில்லை என ஜனாதிபதி கூறினாலும் இன்னும் எமக்கு சரியான நம்பிக்கை வரவில்லை.
பொது வேலைத்திட்டங்கள் தொடர்பிலே நம்பிக்கை இருந்தாலும், சமூகம் சார்ந்த விடயத்தில் அச்சம் நிலவுகின்றது.
மேலும், கடந்த கால அரசாங்கத்தை போன்று தற்போதைய அரசாங்கத்தையும் பார்க்க வேண்டிய சுழ்நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,