மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 26 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
மன்னார் மாவட்டத்தில் இம்மாதத்தின் 10 நாட்களுக்குள் 26 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 533 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 26 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 533 கோவிட் தொற்றாளர்களும், இந்த வருடம் 516 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட 187 பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக அனுப்பி
வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri