மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 26 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
மன்னார் மாவட்டத்தில் இம்மாதத்தின் 10 நாட்களுக்குள் 26 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 533 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 26 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 533 கோவிட் தொற்றாளர்களும், இந்த வருடம் 516 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட 187 பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக அனுப்பி
வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri

இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan

துளி கூட மேக்கப் போடாமல், முகத்தில் சுருக்கங்கள் உடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
