மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 26 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
மன்னார் மாவட்டத்தில் இம்மாதத்தின் 10 நாட்களுக்குள் 26 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 533 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 26 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 533 கோவிட் தொற்றாளர்களும், இந்த வருடம் 516 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட 187 பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக அனுப்பி
வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri