மன்னார் மாவட்டத்தில் மீண்டும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
மன்னார் மாவட்டத்தில் சடுதியாக குறைவடைந்து வந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துக் காணப்படுகிறது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் விடுத்துள்ள நாளாந்த கோவிட் தொற்று நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று(27) காலை விடுத்துள்ள குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பி.சி.ஆர்.பரிசோதனையின் போது நேற்று(26) மாலை மேலும் 16 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை 85 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 3268 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் தற்போது வரை 36 கோவிட் மரணங்கள்
நிகழ்ந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.