மாங்குளம் பொலிஸாரால் வாகனத்துடன் மூவர் கைது (PHOTOS)
மாங்குளம், கிழவன்குளம் பகுதியில் சிலர் தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக நபரொருவர் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து மாங்குளம் பொலிஸாரால் வாகனத்துடன் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாங்குளம், கிழவன்குளம் பகுதிக்கு ஹயஸ் ரக வான் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றில் நேற்று சென்ற குழுவினர் அங்குள்ள வீடு ஒன்றின் முன்னால் நின்று வீட்டு குடும்பஸ்தரை அழைத்து தமது மதத்திற்கு மாறுமாறு கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதுடன், குறித்த குடும்பஸ்தருக்கு அங்கு சென்ற சிலர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர் மாங்குளம் பொலிஸார் மற்றும் 119 பொலிஸார் ஆகியோருக்கு செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அங்கு வருகை தந்த ஹயஸ் ரக வாகனத்தையும், அதனுள் வந்த மூவரையும் கைது செய்துள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள மாங்குளம் பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan