இலங்கையில் கட்டாயமாகும் தடுப்பூசி சான்றிதழ்: அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
இலங்கையில் கோவிட் தடுப்பூசி சான்றிதழ் பாவனையை இறுக்கமாக்கும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
அதற்கமைய பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் உட்பட மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் நுழையும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இதுவரையில் நாட்டு மக்களின் சனத்தொகையில் 30 வயதிற்கு மேற்பட்ட 70 சதவீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, நாட்டு மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 4 மணி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதாக கோவிட் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது. அதற்கமைய 6 மாத காலங்கள் நீடித்த மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு இன்றைய தினம் முடிவுக்கு வந்துள்ளது.
அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை நாளை முதல் முழுமையாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam