வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் 14 நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றின் புதிய மாறுபாட்டின் அறிகுறிகள் 7-10 நாட்களுக்குப் பிறகு தென்படுகின்றன. ஆகையில் கட்டாய தனிமைப்படுத்தல் 14 நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
இதன்படி, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிடும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய தினத்தில் மாத்திரம் 931 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, இலங்கையில் 99,653 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 90,036 ஆகும்.
அதேபோல், நாட்டில் கோவிட் தொற்றுக்குள்ளாகி 634 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
