பொது போக்குவரத்து பயன்படுத்துபவர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை
பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சுகாதாரத் துறையினால் சுற்றறிக்கை அல்லது விழிப்புணர்வு வெளியிடப்பட்டால், மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மட்டுமே பொதுப் போக்குவரத்தில் பயணிக்க வேண்டும் என்ற உண்மையை நாம் கடைபிடிக்க வேண்டும்.
ஏனெனில் இது ஒரு தொற்றுநோயாகும். இந்த நிலைமை தொடர்பான முடிவுகளை சுகாதார அமைச்சு எடுக்க வேண்டும்.
அதற்கமைய 3 தடுப்பூசி பெற்றவர்கள் மாத்திரமே பொது போக்குவரத்தில் பயணிக்க வேண்டும் என நடைமுறையை பொத மக்கள் பின்பற்ற வேண்டும்.
இது தொடர்பில் எங்களுக்கு கடிதம் மூலம் எதுவும் தெளிவுப்படுத்தப்படவில்லை. எனினும் வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய சுற்றரிக்கை வெளியிட்டு எங்களுக்கு எழுத்து மூலம் அறிவிப்பார்கள்.
அவ்வாறு தகவல் கிடைத்தவுடன் பொது போக்குவரத்தில் தடுப்பூசி அட்டையை சேகரித்து ஆலோசனை வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam