வெளிநாடு செல்ல கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்
வெளிநாடு செல்வதற்காக பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் இடையில் தெதுறு ஓயாவில் நீராடச்சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குருநாகல், மஹவ - பலகொல்லாகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அனுராதபுரம் பகுதியை சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
மேற்படி நபர் வெளிநாடு செல்வதற்காகத் தனது பயணத்தைத் தொடங்கி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

பயணத்தின் இடையே பலகொல்லாகம பகுதியில் உள்ள தெதுறு ஓயாவில் நீராடுவதற்காக அவர் இறங்கிபோது, ஆற்றின் நீர்ச்சுழலில் சிக்கி எதிர்பாராத விதமாக அவர் நீரில் மூழ்கியுள்ளார்.
நீரில் மூழ்கியவரை நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் மீட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையம் நோக்கிச் சென்ற பயணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 21 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam