அவுஸ்திரேலியாவில் இலங்கை விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்
சிட்னி விமான நிலையத்தில் பாதுகாப்பு உத்தரவை மீறி ஓடுபாதைக்கு அருகில் ஓடி விமானத்தில் ஏற முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிடைத்த அழைப்பிற்கமைய, அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய நபர், பாதுகாப்பு பகுதியினூடாக ஓடிச்சென்று தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விமானத்தின் சரக்கு பெட்டி
இலங்கை செல்லும் விமானத்தின் சரக்கு பெட்டிக்குள் அவர் நுழைய முயன்றதாகவும், பொருட்களை கையாளுபவர்கள் தலையிட்டு சந்தேக நபரை பொலிஸ் அதிகாரிகளின் காவலில் வைத்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த நபர் மனநல பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மேலும் விமான நிலையத்தில் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்தது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது வேறு எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை எனவும் அடுத்த 12 மாதங்களுக்கு சிட்னி சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
