கோட்டாபயவின் மனைவியிடம் பணம் பெற முயற்சித்த நபர் பிணையில் விடுதலை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமா ராஜபக்சவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்பை எடுத்து 10 லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் திலின கமகே, குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
எனக்கு பணம் தர வேண்டியவரின் இலக்கம் என நினைத்து தொலைபேசி அழைப்பை எடுத்தேன்

கொலன்னாவை சாலமுல்ல லக்சந்த செவனவில் வசித்து வரும் கணேசன் ஜெகன் என்ற நபரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் சுகிஷ்வர பண்டார செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை நடத்தி சந்தேக நபரை கைது செய்ததாக டிஜிட்டல் தடயவியல் ஆய்வுக்கூடத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.கே. சேனாரத்ன நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தனக்கு வேறு ஒரு நபரிடம் இருந்து 4 லட்சம் ரூபா கிடைக்க வேண்டியுள்ளதாகவும் அதனை பெற்றுக்கொள்ள அவரது தொலைபேசி இலக்கம் என நினைத்து தொலைபேசி அழைப்பை எடுத்ததாகவும் சந்தேக நபர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் விசாரணைகளை நடத்து குற்றவியல் விசாரணை திணைக்களம்

சந்தேக நபரின் இந்த தகவல் முன்னுக்கு பின் முரணானது என்பதால், தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri