கோட்டாபயவின் மனைவியை மிரட்டி கப்பம் கோரிய இளைஞன்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமா ராஜபக்சவை மிரட்டி 10 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொலன்னாவ பிரதேசத்தில் சலூன் ஒன்றில் பணிபுரியும் இளைஞர் ஒருவவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமா ராஜபக்சவின் தனிப்பட்ட தொலைபேசிக்கு அழைப்பு விடுத்த நபர் ஒருவர் அவரிடம் 10 லட்சம் ரூபாய் கப்பம் கோரியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி
தொடர்ந்து அழைப்புகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தான் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி எனவும் இவ்வாறு அழைப்பேற்படுவதனை நிறுத்துமாறும் அயோமா ராஜபக்ச குறித்த நபரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தான் யாரிடம் பேசுகிறேன் என தனக்கு தெரியும் என அழைப்பேற்படுத்திய இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இனியும் தாமதிக்காமல் பத்து லட்சம் ரூபாய் தொகையை தரும்படி கேட்டுள்ளார். இல்லை என்றால் முதல் முறை போல் இல்லாமல் சுனாமி போல் கூட்டத்தை கொண்டு வந்து வீட்டை சுற்றி வளைத்து துரத்தியடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிரட்டல் அழைப்புகள்
இந்த நபரிடம் இருந்து பல மிரட்டல் அழைப்புகள் வந்ததையடுத்து, அயோமா ராஜபக்ஷ இது குறித்து முன்னாள் ஜனாதிபதி பணியாளருக்கு தெரிவித்தார்.
அதன் பின்னர் அவர் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த நபரை நேற்று கைது செய்துள்ளனர்.
இந்த நபருக்கு அயோமா ராஜபக்சவின் தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் எவ்வாறு கிடைத்தது என்பது புலனாய்வுத் திணைக்களத்தின் கவனத்திற்குள்ளாகியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஆனையிறவில் ஆடும் சிவன் 22 மணி நேரம் முன்

தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சுத் திணறி உயிரிழந்த பச்சிளம் குழந்தை:7 வயது மகனுடன் தாய் எடுத்த வேண்டாத முடிவு! News Lankasri

கல்வித் தகுதி தேவையில்லை... 90,000 பவுண்டுகள் வரை ஊதியம்: பிரித்தானியாவில் வேலை வாய்ப்புகள் News Lankasri

இனி நான் உங்க தம்பி இல்லை.. கண்கலங்கிய ஜீவா.. இரண்டாக உடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் Cineulagam
